
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: ராம் பிரசாத் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/இரண்டாம்-அடுக்கு-பிழைத்த/மயிலாடுதுறையில் பிறந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.சொல்வனம், கணையாழி, உயிரோசை, காவ்யா, வாசகசாலை, ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Inexhaustible, Those Faulty Journeys, MeT App, Fancy Nuptials என்ற படைப்புகளும் தமிழில்ஒப்பனைகள் கலைவதற்கே ,உங்கள் எண் என்ன? அட்சயபாத்திரா, இரண்டு விரல்கள், வரதட்சணா, ஏஞ்சலின் மற்றும் சிலர், வதுவை - நாவல், வாவ் சிக்னல், 22028, மரபணுக்கள், தீசஸின் கப்பல்என்ற படைப்புகளும் வெளிவந்துள்ளன. ராம் அவர்களின் வாவ் சிக்னல் அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருக்கிறது.ஜீரோ டிகிரி பப்ளிஷிங் 2022 இலக்கிய விருது, JCE - Distinguished Alumni Award - பெற்றுள்ளார்.