DiscoverSearch
ஷெய்ஹுல் முஃப்லிஹீன், சுல்தானுல் ஆரிபீன் M.S.M அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்களால் இயற்றி இசையமைக்கப்பட்ட இவ் ஏகத்துவப் பாடல்களின் வரிகள் ஒவ்வொன்றும் வெறும் கற்பனைத் திறனால் புனையப்படாமல் இல்ஹாமத்தைக் கொண்டு வெளிப்பட்டிருப்பதால்; நடுநிலைவாதியாக இசைநயத்துடன் கேட்டு, எழுத்துருவில் படிக்கும்போது, குர்ஆன் ஹதீஸ்களின் கருத்துக்களாலும், தெய்வீக உணர்வுகளாலும் உள்ளம் உந்தப்பட்டு சாந்தியடைய வழிசெய்கிறது.

மார்க்கத்தின் உண்மை புதையுண்டு போன காலகட்டத்தில் மானிட சமூகத்தில் கேட்டல், கிரகித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியினூடாக தௌஹீதின் உண்மை மக்களுக்கு பாடல்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனை இலகுவில் விளங்கியறிந்து சாமான்யனும், சான்றோரும் பயனுறும் வகையில் கடினமான இலக்கண சொற் பிரயோகங்களைத் தவிர்த்து நம்வழக்கிலுள்ள நடைமுறைச் சொற்களைக்கொண்டே இந்த ஞானப்பாடல்கள் அமையப்பெற்றிருப்பது குறிபிட்டுக்கூறக்கூடிய சிறப்பம்சமாகும்.
View Radio